ரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை

18.01.2021 09:58:20

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் என, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

மனோ கணேசன் தனது பதிவில், “ரஞ்சன் ராமநாயக்க எம்பியை பாராளுமன்ற கூட்டங்களில் சமூகமளிக்க அனுமதிக்குமாறு, இது நீதிமன்ற வரம்புக்கு வெளியே பாராளுமன்றத்தின் உரிமை என்ற அடிப்படையில், சபாநாயகரை  ஐக்கிய மக்கள் சக்தியான எதிரணி அதிகாரபூர்வமாக கோரும்” என குறிப்பிட்டுள்ளார்.