அன்னை பூபதி நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு நினைவேந்த அனுமதி மறுப்பு!

19.04.2023 11:26:55

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மட்டக்களப்பு அன்னை பூபதி நினைவிடத்தில் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் மேலாதிக்கத் தனத்தை இல்லாது செய்து தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரி, உலகிற்கு அகிம்சையை போதித்த இந்திய தேசத்தையே அகிம்சையால் நிலைகுலையச் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் பெரும் எழுச்சியுடன் நினைவேந்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஊர்தி இன்று மட்டக்களப்பை சென்றடைந்துள்ளது. இவ்வாறான நிலையில், மட்டக்களப்பு அன்னை பூபதி நினைவுத்திடலில் நினைவேந்தல் நடத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.