எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு

14.06.2021 13:29:20

 

சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும்  கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும்  21 ஆம் திகதி சட்டப்பேரவை கூடும்போது, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.