எதிர்காலத்தில் வேறுவடிவங்களில் முன்னெடுக்கப்டும் – எங்கள் எழுச்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றுதிரளவேண்டும்- சிறீதரன்

07.02.2021 09:00:00

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் இன்னும் பல வளர்ச்சி காணும்.இந்த போராட்டம் இத்துடன் முடிவுறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இன்னும் சில மாதங்களில் வேறு வடிவங்களில்; முன்னெடுக்கப்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

தமிழ்மக்களின் தேசிய விடுதலை வரலாற்றிலே இது ஒரு முக்கியமான மைல்கல்.
ஆயுதவிடுதலை போராட்டத்திற்கு பிற்பாடு நிறைந்த நெருக்கடிகள்,அடக்குமுறைகள் தமிழ் மக்களிற்கு எதிரான வன்முறை கொடுமைகள் இவற்றையெல்லாம் தாண்டி பல்வேறு பட்டபோராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் கூட,வரலாற்றுரீதியாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற, வடக்குகிழக்கு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலே முன்னிலைப்படுத்தப்படுகின்ற இந்த போராட்டம் முக்கியபாத்திரத்தை வகித்திருக்கின்றது குறிப்பாக வடக்குகிழக்கில் வாழ்கின்ற தமி;ழ் மக்களினதும் தேசிய எழுச்சியையும் தேசிய இருப்பையும் இது முன்னிலைப்படுத்தியிருக்கின்றது.
இந்த போராட்டம் இந்த அடிப்படையில் இன்னும் பல வளர்ச்சி காணும்.
இந்த போராட்டம் இத்துடன் முடிவுறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இன்னும் சில மாதங்களில் வேறு வடிவங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படுகின்ற பிரேரணைகளிற்கு சார்பாகவும் இ;ந்த இடத்திலே இன்னும் நடைபெறுகின்ற அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் உடைத்தெறியும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.