இதுவரை பிரான்ஸில் 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

13.06.2021 11:32:42

 

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 34 அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 83 ஆயிரத்து 944 ஆக உயர்ந்துள்ளது.