முழுமையடையாத சி.ஐ.டி. விசாரணை : அறிக்கை கோருகின்றார் சரத் வீரசேகர !!

16.05.2021 10:35:55

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முழுமையடையாத சி.ஐ.டி. விசாரணை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

விசாரணை முழுமையடையவில்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று 130 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றினை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியிருந்தார்.

அதில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவும், மேலும் 5 சந்தேக நபர்கள் மீது விசாரணை நிறைவடையவில்லை என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி. அறிக்கை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த தாமதம் காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தையை குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது போனதாக நேற்று சட்டமா அதிபர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.