எனக்கு நம்பிக்கை இருக்கிறது

24.05.2023 09:21:25

தான் பதவியிலிருந்து விலக்கப்பட மாட்டார் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

”இந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் நான் நீக்கப்பட மாட்டேன் என்பது எனது நம்பிக்கை. ஏனென்றால் நான் எப்போதும் மக்களுடன் இருந்து இருக்கிறேன்”, என இன்று காலை 10.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து  ரத்நாயக்கவை நீக்குவதற்கான முழு நாள் விவாதத்திற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.