தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் – நரேந்திர மோடி

15.04.2021 09:22:48

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில ஆளுநர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் ஆளுநர்கள் தூண்களாக இருக்க வேண்டும் எனத்  தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.