ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு !

22.04.2021 10:47:36

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் ஆறு இலட்சத்து 89பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பதாயிரத்து 997பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 523பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 26ஆயிரத்து 836பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்;. இதில் 557பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, ஐந்து இலட்சத்து 63ஆயிரத்து 256பேர் பூரண குணமடைந்துள்ளனர்.