இந்தியாவின் முதல் குளோனிங் பசுங்கன்று

28.03.2023 23:01:13

இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறைப்படி கிர் ரக பசுங்கன்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கிர் ரக பசுங்கன்றுக்கு கங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிர் மற்றும் சாஹிவால் ஆகிய இரு மாட்டினங்களை குளோனிங் செய்து இந்த பசுங்கன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம்

குளோனிங் முறைப்படி உருவாக்கப்பட்ட இந்த கன்றுக்குட்டி நல்ல உடல்நலத்துடன் வளர்ந்து வருவதாக தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.