இருபதுக்கு இருபது தொடருக்கான இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு

21.02.2021 10:24:34

இங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவேதியா ஆகியோர் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர்.

தமிழக வீரர்களான நடராஜன், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர், மார்ச் 12-ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இருபதுக்கு இருபது போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்திலுள்ள சர்தார் படேல் மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில்,

Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas Iyer, Suryakumar Yadav, Hardik, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, Varun Chakravarthy, Axar Patel, W Sundar, R Tewatia, T Natarajan, Bhuvneshwar Kumar, Deepak Chahar, Navdeep, Shardul Thakur.