4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி

17.01.2021 10:01:30

 

புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதல் நாளானா நேற்று 274 முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

இந்நலையில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.