கண்காணிப்பு வலயத்திலிருந்து திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் விடுவிக்கப்பட்டது

12.04.2021 09:24:22

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து இன்று ( திங்கட்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவிப்பினை நேற்று  விடுத்திருந்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், இன்று முதல் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்,பதினான்கு நாட்களாக கண்காணிப்பு வலயத்துக்குள் உட்படுத்தப்பட்டு, அங்குள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 88 பேருக்கு  மாத்திரம், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்தே பாரதிபுரத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகள், இன்று காலை 6 மணி முதல் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.