தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்

18.04.2023 07:01:53

இலங்கையில் சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க கூடிய செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.