தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம்: இளைஞனுக்கு சிக்கல்

08.04.2021 09:26:02

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தை கையடக்க ​தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன், நேற்று முன்தினம் (3)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் விசாரணைகளின்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது “பி“ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.