கொழும்பு வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் !

01.05.2021 09:29:38

உலக மே தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் கொழும்பு நகரை இன்று காலை சில ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

மேற்படி ஹெலிகாப்டர்கள் பொறளை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

நாட்டில் கொரோனா அச்சம் உள்ளதால் மே தினத்தை முன்னிட்டு வழமையாக நடத்தப்படும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை அனைத்து கட்சிகளும் நிறுத்தியுள்ளன.

எனினும் சிலர் கூட்டங்களை மாத்திரம் நடத்த முயற்சி செய்து வருகின்றதாகவும், அதனை கண்காணிக்க மேற்படி ஹெலிகாப்டர்கள்  வட்டமிட்டதாகவும் கூறப்படுகின்றது.