பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,490பேர் பாதிப்பு- 8பேர் உயிரிழப்பு !

14.06.2021 13:50:40

 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 490பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 45இலட்சத்து 65ஆயிரத்து 813பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 904பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 50ஆயிரத்து 039பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 158பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 42இலட்சத்து 87ஆயிரத்து 870பேர் பூரண குணமடைந்துள்ளனர்.