பழ நெடுமாறன் கூறிய கருத்து வெறுமனே நிதி சேகரிப்புக்காக மட்டுமே! – சித்தார்த்தன்

01.03.2023 10:27:31

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பழ நெடுமாறன் கூறிய கருத்து அவருடைய கருத்தல்ல. அதனை அவரே கூறியுள்ளார். என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியிருக்கின்றார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி பிரபாகரணை இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெறுமனே நிதி சேகரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.