இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்

24.05.2023 09:23:27

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் சீன பிரஜை ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வர்த்தகம் .தொழில், கல்வி மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக இலங்கைக்கு வரும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு வருகை தரும் சீனப் பிரஜைகள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் மத மற்றும் கலாசார பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும் என்றும் தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இரண்டு கடவுச்சீட்களுடன் இலங்கை வந்த சீனர் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.