தமிழருக்கு நேரடி உரிமைகள் வழங்க அவசியமில்லை

19.04.2023 11:23:11

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இனக்கலவரம் வெடிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவை உபகுழுவை நியமித்து 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணில் அரசாங்கம் வகுத்துள்ள வியூகத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விமல் எச்சரிக்கை

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

“நல்லிணகத்தை 3 கட்டங்களாக ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். அதில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குகின்றது. 

தமிழருக்கு நேரடி உரிமை அவசியமில்லை

 

இதனைக் கைவிட வேண்டும். அதனையும் மீறி முழுமையாக நடைமுறைப்படுத்த எத்தனித்தால் நாட்டில் என்றுமில்லாத வகையில் பாரிய இனக்கலவரம் வெடிக்கும்.

ஆகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் அனுமதிக்கமாட்டோம். தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக அவர்களுக்கு நேரடி உரிமைகள் வழங்க வேண்டிய அவசியமில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.