சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த மற்றுமொரு அவுஸ்ரேலிய வீரர் !

09.04.2021 11:06:35

 

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, அவுஸ்ரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்பை, தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

நடப்பு தொடரிலிருந்து அவுஸ்ரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் விலகியதையடுத்து பெஹ்ரென்டார்ப்பை சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

30வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்ப், ஏழு ரி-20 சர்வதேச போட்டிகளிலும் 5 ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜேசன் பெஹ்ரென்டார்ப், அந்த அணிக்காக 5 ரி-20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.