நேட்டோவில் இணைகிறது ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்ட நாடு - உக்கிர போர் பதற்றம்!

04.04.2023 20:55:57

 

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய உள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முதல் நேட்டோ அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைய உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய உள்ளமை பெரும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதால் அந்த நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும். 

நேட்டோவில் பின்லாந்த்

 

உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பு நேட்டோ. நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய இராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த இராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. 

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அது 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

உக்ரைன் ரஷ்யா போர்

அதேவேளை பின்லாந்தை போன்று ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஸ்வீடன் மீதான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ள நிலையில் பின்லாந்து இன்று நேட்டோ அமைப்பில் இணைய உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு மத்தியில், பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.