ராஜஸ்தான் ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ?

12.04.2021 09:59:52

ஐ.பி.எல். ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை பஞ்சாப் அணியும் 12 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இரு அணிகளிலும் பலம் பொருந்திய வீரர்கள் இருப்பதால், இப்போட்டியின் வெற்றி, தோல்வியை கணிப்பது கடினம்.