இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் சவுதி அரேபியாவில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் !

16.04.2021 09:18:42

 

சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

சுமார் 18 மாதங்களாக குறித்த அனைவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண்களுள் மூன்று சிறு குழந்தைகளும் உள்ளதாகவும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.