கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்

24.03.2023 00:24:05

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு நாளை நிறைவடையவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு இன்று(23) வெளியிட்டுள்ளது.

கல்வியாண்டு

அமைச்சின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை நாளையுடன்(24) நிறைவடையும்.

2023 ஆம் ஆண்டுக்குரிய கல்வியாண்டின் முதலாம் தவணை மார்ச் 27ஆம் திகதி தொடங்கும் - என அறிவிக்கப்பட்டுள்ளது.