தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்

15.01.2021 09:20:14

அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.

அஞ்சல்துறையின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்துவது என்பது பா.ஜ.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதாக உள்ளது.

சென்றமுறை தமிழில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தி திணிப்பு, சமஸ்கிருத அங்கீகாரம் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நியமித்தது ஆளுநர் தான். ஊழல் தொடர்பாக விசாரணை கமி‌ஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரின் பதவியை நீட்டித்திருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மாணவர்களுக்கு தமிழக அரசு 2 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது.

அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். அவர்கள் எதையும் நிறைவேற்ற போவதில்லை.

தி.மு.க. அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

நாங்கள் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியில் இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்து அதனை நிரூபித்துள்ளோம்.

தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவது குறித்து இப்போது எதையும் தெரிவிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.