இந்தியா தன்னிறைவு பெறுவதில் விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

04.06.2021 10:44:17

 

கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொவிட் பெருந்தொற்று காலத்தில், ஓராண்டில் தடுப்பூசி கிடைப்பதை இந்திய விஞ்ஞானிகள் உறுதி செய்ததுடன், தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளனர்.

இந்த பெருந்தொற்றுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்திற்கும் இந்திய விஞ்ஞானிகள் பங்களிப்பு அளித்துள்ளனர்.

இந்தியா தன்னிறைவு பெறுவதில் விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறுவதையே தேசம் விரும்புகிறது. தன்னிறைவு இந்தியா என்ற கனவை நனவாக்க நாம் உறுதி பூண்டுள்ளோம்.

ஒக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்தற்கான வழிகளை நமது விஞ்ஞானிகள் முனைப்புடன் உள்ளனர். எதிர்காலத்திற்கு வழிக்காட்டிய விஞ்ஞானிகள் அதனை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.