நீண்ட தூர புகையிரத சேவைகள்..

15.01.2021 08:59:36

நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை காரணமாக செயற்படாதுள்ள நீண்ட தூர புகையிரத சேவைகள் எதிர்வரும் வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில் சாரதிகள் சங்க(SLSMU) பொதுச் செயலாளர் கசுன் சாமர உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுடன் ஜனவரி 7ஆம் திகதி கலந்துரையாடியுள்ளனர். இதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஒக்டோபர் 26 முதல் நீண்ட தூர மற்றும் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.