மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கம்

20.05.2023 07:50:57

அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேர் நேற்று வட கொழும்பு ஆதார வைத்தியசாலை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அங்கு சென்றிருந்ததுடன், ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அத்துடன், நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும்,அரசாங்கம் இதனை இல்லாதொழிப்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் வன்மையாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.