சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்க தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு வடகொரிய தலைவர் அழைப்பு!

28.03.2023 23:22:05

ஆயுத-தர அணுசக்தி பொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்தவும், மேலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்கவும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

 

அணு ஆயுத உற்பத்தியை அதிவேகமாக அதிகரிப்பதற்கான முந்தைய வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்துவவதாக வட கொரிய தலைவரின் சமீபத்திய அழைப்பு அமைந்துள்ளது.

அணு ஆயுத நிறுவன அதிகாரிகளுடன் இடம்பெற்ற ஒரு மாநாட்டில், வட கொரியா தனது அணு ஆயுதங்களை எப்போது வேண்டுமானாலும் எங்கும் பயன்படுத்த தயாராக வேண்டும் என வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.