இன்று மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

18.05.2021 10:33:11

 

மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், மன்னார் நகர முதல்வர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி, மலர் துர்வி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து உப்புக்கஞ்சி வழங்கப்பட்டது.