இரா.சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை !

29.05.2021 09:50:17

 

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொவிட் தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப் படுவதாகவும், அதன் தேவை கருதி பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், அது தொடர்பான மரணங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

கொவிட் தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் வைத்தியசாலையில் இல்லாத நிலையில் தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாக இரா,சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.