யாழ்.மாவட்ட அரச அதிபர் மற்றும் கட்டளைத் தளபதிக்கிடையிலான சந்திப்பு...!!!

18.01.2021 09:54:52

யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் மற்றும் யாழ் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு இணைப்பதிகாரியும், மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமைகள், எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலையில் பாடசாலைகள் மற்றும் பொதுச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக கொரோனா தொற்று பரவுவதை தடுத்தல் தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் பலாலி இராணுவ கட்டளை தலைமையக இராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.