கொரோனா அச்சுறுத்தல்- ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

18.04.2021 10:51:40

பொறியியல் படிப்பிற்காக ஏப்ரல் 27, 28 மற்றும் 30ஆம் திகதிகளில்  நடத்தப்பட இருந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜே.இ.இ.மெயின் 2021 தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் தேர்வினை நடத்துவதற்காக திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஜே.இ.இ.மெயின் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் வருடத்துக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றது.

அதற்கமைய பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் குறித்த தேர்வு நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜே.இ.இ.மெயின் 2021 தோ்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.