மூன்று பொலிஸ் பிரிவினரால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு

18.05.2021 10:34:23

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கூடாதென இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) வாழைச்சேனை- விபுலானந்தர் வீதியிலுள்ள தமது வீட்டிற்கு வருகை தந்த வாகரைப் பொலிஸ் பிரிவினரும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவினரும் குறித்த தடை உத்தரவை வழங்கி வைத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும், வாழைச்சேனை பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி தனக்கு மூன்று பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.