தென்னாபிரிக்க தொடரை இழந்தார் தனஞ்சய டி சில்வா

27.12.2020 11:51:14

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.

இதன்போது துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியில் வீரர் தனஞ்சய டி சில்வா காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வௌியேறியிருந்தார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக 2 வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.