தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை இலங்கையில் திறப்பு

15.01.2021 08:57:56

இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலேயே மிகப்பெரிய டயர் உற்பத்தித் தொழிற்சாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ  தலைமையில் நேற்று(14) திறப்பு விழா கண்டது.

பெரெண்டினோ டயர் கோப்பரேஷன் (பிவிடி) லிமிட்டட்(Ferentino Tire Corporation- PVT Ltd) என்ற நாமம் கொண்ட இத்தொழிற்சாலை ஹொரணை பிரதேசத்தில் வாகவத்த எனும் இடத்திலுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமையப் பெற்றுள்ளது. முதல் கட்டமாக 100 மில்லியன் டொலர் முதலீட்டை இத்தொழிற்சாலை பெற்றுள்ளது.

இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் 80 வீதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் மீதமுள்ள 20 வீதமானவை உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.