வர்த்தக ஊழியர் சங்கம் பூரண ஆதரவு!

24.04.2023 12:15:00

தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள் அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு எதிராகவும் நாளை தினம் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் நடைபெறும் கதவடைப்பு போராட்டத்திற்கு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

அந்தவகையில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளையதினம் பணிக்கு செல்ல வேண்டாம் என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

வட மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் குறித்த போராட்டத்திற்கு தமது பூரணமான ஆதரவை வழங்குமாறு தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளைய தினம் இடம்பெறும் பொது முடக்கம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியாயமான இந்த போராட்டத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.