சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என SJB கோரிக்கை

26.05.2023 16:57:26

சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிகள் இவ்வாறு செயற்படும் போது அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.