கியூபா கம்யுனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளராக மிகுவேல் டயஸ் கனேல் !

21.04.2021 09:37:39

கியூபா கம்யுனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளராக மிகுவேல் டயஸ் கனேல் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1959 ஆம் ஆண்டு கியூப புரட்சிக்கு பின்னர் பிடல் அல்லது ராவுல் காஸ்ட்ரோ தவிர வேறு ஒருவர் முதல் முறையாக கியூபாவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

காஸ்ட்ரோவுக்கு விசுவாசமானவராகவும் அவரின் பொருளாதார வடிவத்தை ஆதரிப்பவராகவும் டயஸ் கனேல் நோக்கப்படுகின்றார்.

தமது தலைமை பொறுப்பை இளம் தலைமுறைக்கு வழங்கும் அறிவிப்பை ராவுல் காஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். 60 வயதான டயஸ் கனேல், ராவுலை விடவும் 30 ஆண்டுகள் இளையவர்.

89 வயதான ராவுல் காலஞ்சென்ற தனது மூத்த சகோதரர் பிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து பதவியை ஏற்று 2011 தொடக்கம் அந்த பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.