ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக இந்தியா தெரிவிப்பு!

04.04.2023 21:07:16

ஜம்முவில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலம் போடப்பட்ட இந்த பொதியினுள் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கையெறி குண்டுகள் இருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பலமுறை எல்லை தாண்டி வரும் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.