பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,729பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு !

23.04.2021 10:15:14

 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 729பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 98ஆயிரத்து 431பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 345பேர் உயிரிழந்துள்ளனர்

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 99ஆயிரத்து 288பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 276பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 41இலட்சத்து 71ஆயிரத்து 798பேர் பூரண குணமடைந்துள்ளனர்