சீனா இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

12.04.2021 09:00:00

 

தமது நாட்டு தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் ஊடகப்பேச்சாளரும் அரசியல் பிரிவுத் தலைவருமான லு சொங், “இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே சீன அரசாங்கம் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்தது.

இந்த தடுப்பூசியை யாருக்கு எங்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அது அந்நாட்டின் உள்ளக விவகாரமாகும். அதில் சீனா ஒருபோதும் தலையிடப்போவதில்லை” என தெரிவித்தார்.

இதேவேளை சீன தடுப்பூசிக்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.