முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார் !

06.04.2021 08:33:58

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார்.

சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘ பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேநேரம் தென்காசி சங்கரன் கோவில் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்தார். அதேபோல் மந்தைவெளி வாக்குச்சாவடியில் பா.ஜ.க உறுப்பினர் குஷ்புவும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.