தமிழர் இனப்படுகொலை குறித்த கனடா பிரதமரின் அறிக்கை

20.05.2023 07:56:16

உள்நாட்டு பொறிமுறை நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது என கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகளை முன்னிட்டு நினைவுகூரும் வகையில் கனடா பிரதமர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அவரது இந்த அறிக்கையை கண்டித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளிற்கு உதவியாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.