கொழும்பின் ஒரு பகுதியே துறைமுக நகரம், நாட்டின் சட்டம் அங்கும் அமுல்படுத்தப்படும்

19.04.2021 09:43:41

கொழும்பு துறைமுக நகரத்திற்கும் இலங்கை சட்டம் பொருந்தும் என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகரம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்றும் அது குத்தகைக்கு விடப்படும் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.