சிறைச்சாலையில் உயிரை மாய்த்த இளம் கைதி

21.03.2023 22:27:40

கண்டி - போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளதாக பல்லேகல காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கண்டி - போகம்பர சிறைச்சாலையில் 

 

நேற்று (20) இரவு 10 மணியளவில் அவர் சிறைச்சாலையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தம்பாவெல - குருதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் பிரியதர்ஷன (வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.