தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – ஹர்ஷவர்தன்

19.04.2021 10:25:15

கொவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை  10 மடங்கு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தாயரிப்பு மே மாதத்திற்குள் 74.1 இலட்சமாக இரட்டிப்பாகப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவேக்ஸின் தடுப்பூசி 10 மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.